Friday, January 25, 2013

குஜராத் எப்படி ஒளிர்கிறது பாருங்கள் சதவிகித கணக்குகளுடன்

 வெற்றியும்..தோல்வியும் மட்டும் ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிப்பதில்லை...தன்னிகரில்லா தலைவர், கர்ம வீரர் காமராஜர் தேர்தலில் தோற்றவர்தான்

                                                             குஜராத் ஒளிர்கிறது
                                                      மோடி ஓர் மாயத்தோற்றம்

மோடி நல்லவரா, கெட்டவரா திறமையானவரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவே இல்லை.. 3 வது முறை மோடி வெற்றி பெற்றிருக்கிறார்...என்பதால் அவர் மிகத் திறமையானவர் என்று இன்று தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை அத்துனை பேரும் அதைக் கொண்டாடுவதுதான் ஆச்சரியம்...33 வருடம் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு முதலமைச்சராக இருந்தாரே..ஏன் அவரை அடுத்த பிரதமர் என்று யாரும் சொல்லவில்லை..ஏன் அது பற்றி எந்த ஊடகங்களும் பேச வில்லை...தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு...ஆனால் இதுவரை அவர் ஒரு தேர்தலில் கூட தோற்றதில்லையே...இதைப் பற்றி நாம் பேசுகிறோமா...வெற்றியும்..தோல்வியும் மட்டும் ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிப்பதில்லை...தன்னிகரில்லா தலைவர், கர்ம வீரர் காமராஜர் தேர்தலில் தோற்றவர்தான்...ஆனால் அவர் மீது யாராவது விமர்சனம் வைக்க முடியுமா இன்று வரை...ஆக வெற்றி தோல்வி என்பதல்ல முக்கியம்..அடுத்து குஜராத்தைப் பற்றியும் மோடியைப் பற்றியும் விமர்சிப்பவர்கள் எல்லோரும் குஜராத்திற்கு போனவர்கள் அல்லர் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவரை பாராட்டுபவர்களும் குஜராத்திற்குப் போனதில்லை என்பதே நிதர்சனம்..ஆக இங்கு திட்டமிட்டே ஒரு விசயத்ததை அனைவரும் செய்கின்றனர்...மோடியை தேசியத் தலைவராக உருவாக்குவதற்கான முயற்சியை மிகவும் வீரியமாகச் செய்கின்றனர்..அதற்கு ஊடகங்களும் துணைபோவதுதான் வேதனை...


"மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துத் துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், இப்படி ஓர் ஆள் கிடைத்தால் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ!. குஜராத் போல நல்லாட்சி இந்தி யாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் மோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து வேட்டு!.
மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20.
வருமான அடிப்படையில் ஆறாவது இடம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4வது இடம்.
தனிநபர் வருமான அடிப்படை யில் 9ஆவது இடம். பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்.
கல்வியில் 14வது இடம்.
மின் உபயோகத்தில் 10ஆம் இடம்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர் வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண் கள் 12ஆம் இடம்.
பெண்கள் 15ஆம் இடம்.
சரியான உடல் எடை விகிதத் தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடம்.
மொத்த சாலைகளின் நீளத் தில் 10ஆம் இடம்.
சாலைகளின் அடர்த்தி விஷ யத்தில் 21வது இடம்.
மின் நிலைய நிர்மாண இடத் தில் 2வது இடம்.
மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில் 8வது இடம்.
சராசரி வாழ்நாளின் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.
ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலத் திற்கு உற்பத்தியில் நான்காம் இடம்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான் இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் மயக்க மிட்டாய் கொடுக்கிறது.-----------நன்றி-கீற்று


Thursday, January 24, 2013

கொசுக்களை ஒழிக்க ஒரு புதிய எளிய வழி!


  கொசுக்களை ஒழிக்க ஒரு புதிய எளிய வழி!


டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை
ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

Friday, January 4, 2013

ஏன் நடக்கிறது கற்பழிப்பு ஒரு ஆராய்ச்சி




கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது

நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது

இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.

இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்துதுடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரதச்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்