Sunday, December 30, 2012

பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறுப்புஇது பற்றி மக்கள் கருத்து

30/12/12
பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க முடியாது மதுரை ஆதினம் மறுப்பு............!!


பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தமிழக, இந்தியப் பெண்கள் அனைவரும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிய மதுரை ஆதினகர்த்தர் பரிந்துரைத்திருந்தார். அருணகிரிநாதரின்இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு கேட்கும் படி கோரியிருந்தது.

ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.

--------------------------------------

மக்கள் கருத்து :

பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை,



பாஜக வினர் சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்த்தது, பாஜக அலுவலகத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து காமலீளைகளுக்கும் பின்னணியில் பாஜக வும், இன்னபிற இந்துத்துவ இயக்கங்களும் இருப்பதால்....

மேற்கொண்டு இந்திய பெண்களின் வாழ்வை சீரழிக்க பர்தா தடையாகி விடும் என்ற அச்சத்தில் பாஜக வே பெண்கள் அமைப்பை ஏவி விடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்,

பாஜக வின் காமலீலைகள் புரியாத பெண்களும் போராட்டம் என்ற பெயரில் சீன் போடுவது வருந்ததக்கது

No comments:

Post a Comment